பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான். சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. நோய் தீர்க்கும் மருந்தாகவும் பூக்கள் பயன்படுகின்றன.செல்வரத்தம் பூவைத் தண்ணீரில் இட்டு சூடாக்கி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமாகுமாம். தூதுவளைப் பூவை வதக்கி துவையலாக உண்டால் சளி மற்றும் மூக்கடைப்பு குணமாகுமாம். பூக்களின் மருத்துவக் குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். பூக்களுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டு என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்து வெற்றியும் கண்டுள்ளார்கள்.